கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையிலிருந்து, இரண்டாம் போக சாகுபடிக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 8ல், 50 அடியை தாண்டியது. இதையடுத்து, இரண்டாம் போக சாகுபடிக்கு, டிச., 14 முதல் ஏப்., 12 வரை, 120 நாட்களுக்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்கால்கள் மூலம், தண்ணீர் திறக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, கே.ஆர்.பி., அணையிலிருந்து வாய்க்கால்கள் மூலம், தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கே.ஆர்.பி., அணையில், தற்போதுள்ள நீர் இருப்பை கொண்டும், நீர்வரத்தை பொறுத்தும், அணையிலிருந்து வலதுபுற வாய்க்கால் மூலம், வினாடிக்கு, 87 கன அடி, இடதுபுற வாய்க்கால் மூலம், 93 கன அடி என மொத்தம், 180 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிருஷ்ணகிரி வட்டத்தில், 16 பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை, சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE