மாரண்டஹள்ளி: டிராக்டர் டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்ற விவசாயியை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கானூர் கொட்டாயை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் மாதையன், 45; இவர், கடந்த சில தினங்களுக்கு முன், டிராக்டரில் கூலித்தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அத்திமுட்டுலு சென்றுள்ளார். டிராக்டரை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜன், 42, என்பவர் வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக, நாகராஜனுக்கும், மாதையனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை, ஊர் மக்கள் சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று, மாதையன் அத்திமுட்லு சென்றுள்ளார். அங்கு அரிவாளுடன் வந்த நாகராஜ், மாதையனை ஓட ஓட விரட்டிச் சென்று, ஊர் மத்தியில் சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மாதையன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரண்டஹள்ளி போலீசார், மாதையனின் உடலை மீட்டு, தலைமறைவான நாகராஜை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE