ராசிபுரம்: ராசிபுரத்தில், 45 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் திங்கட்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடக்கிறது. கடந்த, ஆறு மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் ஏலம் தொடங்கியது. இதனால், வியாபாரிகள், விவசாயிகள் முன்னிலையில் பூஜை போட்டு விற்பனை நடந்தது. உயர் ரகம், 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 7,169, குறைந்தபட்சம், 6,849 ரூபாய்; சாதா ரகம், 6,369 - 5,699 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,825 மூட்டைகள், 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE