புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது எனக்கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க தயார் எனவும் கூறியுள்ளார்.
டில்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று (டிச.,15) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கெடுத்தனர். நேற்று 11 மாநில விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேசினர். பின் விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ., அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது. பா.ஜ., ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது. பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE