கரூர்: வெண்ணைமலை முருகன் கோவில், மேம்பாட்டு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். கரூர் அருகில் வெண்ணைமலையில், பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றிலும், தார்ச்சாலை, நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இப்பணிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். 'பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்' என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, துணை தாசில்தார் அன்பழகன், ஒன்றிய பொறியாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE