கரூர்: அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அதை வலியுறுத்தி, டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், மா.கம்யூ., காங்., உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் அதானி, அம்பானி ஆகியோரின் வணிக நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்ககோரியும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கரூர்-கோவை சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மா.கம்யூ., கட்சி, வி.சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE