குளித்தலை: மேட்டு மகாதானபுரத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்; இருவர் தலைமறைவாகினர். குளித்தலை அடுத்த, மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் இரட்டைவாய்க்கால் பிள்ளையார் கோவில் அருகில், தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக, நேற்று முன்தினம் மதியம் லாலாப்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனைக்கு சென்றபோது, மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த கதிரேசன், 38, ஜெகதீசன், 28, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE