கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தார்ச்சாலை மோசமாக உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி கடைவீதியில் இருந்து, அரசு மேல்நிலைப்பள்ளி வரை, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக, மக்கள் மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். சாலை மேடு, பள்ளமாக மாறி விட்டது. மழை காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சிரமம் ஏற்படுகிறது. விபத்து வாய்ப்பும் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE