நாமக்கல்: தமிழகத்தில், கடந்த, 2 முதல், கல்லூரிகளில், ஆய்வியல் நிறைஞர்கள், முதுநிலை அறிவியல் பாடங்களுக்கான, இறுதியாண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன. மேலும், கடந்த, 7 முதல், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் அரசு கலைக்கல்லூரியில், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு வகுப்புகளில், 1,035 மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு, வகுப்புகள் மற்றும் ஆய்வக வகுப்புகள். அரசு வகுத்துள்ள கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நெறிமுறைகளின் படி, போதிய இடைவெளியுடன் நடத்தப்படுகிறதா என்பதை, கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவியரிடம் அவர் பேசியதாவது: மாணவியர், வகுப்புகளில், இடைவெளிவிட்டு அமர்வதுடன், வெளியே செல்லும் போதும், இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பஸ் பயணத்தின் போதும், கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கொரோனா நோய்த்தொற்று வயதானவர்களுக்கு எளிதில் பாதிக்கும் என்பதை, அனைத்து மாணவியரும் தெரிந்து கொள்வதோடு, வீட்டில் பெரியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆர்.டி.ஓ.,கோட்டைக்குமார், கல்லூரி முதல்வர் சுகுணா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE