நாமக்கல்: வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நாமக்கல்லில் பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர். தமிழகத்தில், வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க.,வினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகங்களில் அமைதியான முறையில், மனு அளிக்கும் போராட்டம் நடத்துவதென, மாவட்ட செயற்குழு கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல்லில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுவில், 391 கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் மைய நூலகம் பின்புறம் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், மாநில துணை பொது செயலாளர் தினேஷ்பாண்டியன் தலைமையில், பா.ம.க., நிர்வாகிகள், வி.ஏ.ஓ., பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். முன்னதாக, இடஒதுக்கீடு கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், மாவட்டம் முழுவதும், கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE