நாமக்கல்: கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட, கொல்லிமலை வளப்பூர்நாடு பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர்கள், தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி, கலெக்டர் மெகராஜிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது: கொல்லிமலையில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கவே, தற்காலிக அடிப்படையில் ஆண், பெண் என, 23 ஊழியர்களாக எங்களை நியமித்தனர். தினசரி, 285 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக, அரசு நிதி ஒதுக்கிய நிலையில் தங்களுக்கு இரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE