பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணை பகுதியில், படித்துறை இல்லாததால், பாதுகாப்பில்லாத நிலையில் பொதுமக்கள் குளிக்கின்றனர். பள்ளிபாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதன் முன்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் வருகின்றனர். இங்கு படித்துறை இல்லாததால், திறந்தவெளியில் தான் பயன்படுத்துகின்றனர். இது மிக ஆழமான பகுதியாக உள்ளதால், கவனமாக குளிக்க வேண்டும். இல்லையெனில் விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, படித்துறை, பாதுகாப்பு வளையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE