புதுடில்லி: பெருமுதலாளிகளே சிறந்த நண்பர்கள் என்று தான் மோடி அரசு பார்க்கிறது என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் 20 நாட்களாக நீடிக்கிறது. மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதையடுத்து, பெரு நிறுவனங்களான அம்பானி மற்றும் அதானி தயாரிப்புகளை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று காங்., எம்.பி., ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றை பரப்புபவர்கள். நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். பெருமுதலாளிகளே சிறந்த நண்பர்கள் என்று தான் மோடி அரசு பார்க்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
For Modi Govt:
Dissenting students are anti-nationals.
Concerned citizens are urban naxals.
Migrant labourers are Covid carriers.
Rape victims are nobody.
Protesting farmers are Khalistani.
And
Crony capitalists are best friends.
— Rahul Gandhi (@RahulGandhi) December 15, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE