பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 5வது சோமவாரத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாத 5வது சோமவாரத்தை முன்னிட்டு மாலை 4:00மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு 7:30 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு உள்புறப் பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE