கள்ளக்குறிச்சி : வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.ஆனால், அதனை மீறி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை போலீசார் மூடினர்.டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையிலான போலீசார், போராட்டக்காரர்களை குண்டு கட்டாக துாக்கி பஸ்சில் ஏற்றியதால், போராட்டக் குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், கலெக்டர் அலுவலகம் எதிரே அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE