திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியை உடனடியாக திறக்கக்கோரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்கெட் கமிட்டி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., வட்டார தலைவர் பாவாடை தலைமை தாங்கினார். நகர தலைவர் ஷாஜகான் வரவேற்றார். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் வாசிம் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர்கள் தனசேகரன், தஸ்தகீர், சுமதி, பொதுச் செயலாளர்கள் பத்மநாபன், தாயுமானவன், வெள்ளியங்கிரி, நடேசன், வெற்றிவேல், நகர செயலாளர் அப்துல்லா, பொருளாளர் கூத்தபிரான் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை வழங்க வேண்டும். கமிட்டியை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE