திட்டக்குடி : வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, திட்டக்குடி தொகுதியில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் உதயகுமார், வீரகோவிந்தன், அருளேசன், சாந்தப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தொழுதுார் வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வி.ஏ.ஓ., விடம் இடஒதுக்கீடு கோரி மனு கொடுத்தனர். மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் ஒன்றிய அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் தச்சூர், எழுத்துார், லக்கூர், வெங்கனுார், கல்லூர், ம.பொடையூர் உட்பட பல கிராமங்களில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE