கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 8 துணை தாசில்தார்களை பணி மாற்றம் செய்து, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார்.
குறிஞ்சிப்பாடி தேர்தல் துணை தாசில்தார் செல்வமணி, விருத்தாசலம் துணை தாசில்தாராகவும், நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி வடிப்பக அலுவலராக இருந்த துணை தாசில்தார் (நிலை-1), துணை தாசில்தார் நிலை 2 ஆக அதே இடத்திற்கும், கலெக்டர் அலுவலக சமூகப் பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் சிவக்குமார், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராகவும், திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ராமர், வேப்பூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், புவனகிரி மண்டல துணை தாசில்தார் சந்திரன், கலெக்டர் அலுவலக 'பி' பிரிவு தலைமை உதவியாளராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
திட்டக்குடி தேர்தல் துணை தாசில்தார் மஞ்சுளா, வேப்பூர் மண்டல துணை தாசில்தாராகவும், விருத்தாசலம் மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், விருத்தாசலம் தேர்தல் துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் அசோகன், கடலூர் மண்டல துணை தாசில்தாராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை பயிற்சி முடித்து அவர்கள் மாறுதல் செய்யப்பட்ட இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE