நெல்லிக்குப்பம் : மதுராந்தகத்தில் அம்பேத்கர் சிலையை சேதபடுத்தியவர்களை கைது செய்ய கோரி நெல்லிக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த செய்யூரில் இருந்த அம்பேத்கர் சிலையை நேற்று சமூக விரோதிகள் சேதபடுத்தினர். இதனையடுத்து அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலர் திருமாறன் தலைமையில் 15 பேர் நெல்லிக்குப்பத்தில் மாலை 5.50 மணியளவில் சாலை மறியல் செய்தனர். அவர்களை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.இதனால், கடலுார் - பண்ருட்டி சாலையில் பத்து நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE