சிதம்பரம் : சிதம்பரம் அருகே காவலர் தேர்வு எழுதிய வாலிபர் தற்கொலை செய்துக் கொண்டார்.
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் மணியரசன் மகன் பாலாஜி,25; இவர் இரு தினங்களுக்கு நடந்த காவலர் எழுத்து தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோம் என்ற மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாலாஜி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE