ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
நேற்று ராமேஸ்வரம்ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ரயில்வே ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமிராக்கள் பயன்பாடு மற்றும் ஸ்டேஷனில் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள், பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது போலீசார் மேற்கொள்ள வேண்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார்.பின் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளும் கோப்புகளை ஆய்வு செய்து, ரயில்வே ஸ்டேஷன், ரயிலில் பெற்றோர் இன்றி பயணிக்கும் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு குறித்து, குழந்தை பாதுகாப்பு மைய அலுவலரிடம்ஆலோசனை நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE