சென்னை:பத்திரிகைகளுக்கு எதிரான அவதுாறு வழக்குகளை ரத்து செய்து, பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்களை விமர்சித்து, அரசியல் கட்சி தலைவர்கள் பேசிய பேச்சு மற்றும் அறிக்கைகளை வெளியிட்டதற்காக, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளுக்கு எதிராக அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.அவதுாறு வழக்குகள் தொடர ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணைகள் பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், பத்திரிகைகளுக்கு எதிரான அவதுாறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப் பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE