குறிஞ்சிப்பாடி : வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை, காங்., குறிஞ்சிப்பாடி ஒன்றியம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், குறிஞ்சிப்பாடி வட்டார தலைவர் அம்பலவாணன்பேட்டை ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தொகுதி தலைவர் சீத்தாராமன், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், குறிஞ்சிப்பாடி, வடலுார் நகர தலைவர்கள் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE