சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பாலப்பட்டு, மோட்டாம்பட்டி, வடபாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, கள்ளிப்பட்டு, பொய்குனம், நெடுமானுார், லக்கினாய்கன்பட்டி, முலக்காடு, ஆலத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் 5000 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 70 கிலோ கொண்ட ஒரு மூட்டை 500 முதல் 600 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில், இந்த ஆண்டு 350 ரூபாய்க்கு விலை போகிறது. இந்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
மரவள்ளிக் கிழங்குக்கு நியாயமான விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE