முதுகுளத்துார் : வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்த விவசாயிகளுக்கான செயல் முறை விளக்கம் மல்லாங்கிணறு கிராமத்தில் நடந்தது.
முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு மானிய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட இயந்திரங்கள், செயல்முறைகள் மற்றும் கூட்டுப் பண்ணையத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உதவி மேலாளர் சேகர் உட்பட பலரும் இருந்தனர். முதுகுளத்துார், வெங்கலகுறிச்சி, நல்லுார், அப்பனேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE