கும்மிடிப்பூண்டி : தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அச்சத்தால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளியில், பிளஸ் 1 பயிலும், மாணவ - மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள, 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், சைக்கிள்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.விரைவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, சைக்கிள்கள் வழங்க இருப்பதாக, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE