திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகள் மற்றும் இதய பிரச்னை உடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நடந்த, பல்வேறு நிகழ்ச்சியில் கலெக்டர் பொன்னையா பங்கேற்றார். பின் செய்தியாளர்கள் அவர் கூறியதாவது:அரசு மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பிறவிக் குறைபாடு மற்றும் இதய பிரச்னைகள் உடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, புலன்களை ஒருங்கிணைக்க பயிற்சி அளிக்கும் அறை, திறக்கப்பட்டு உள்ளது.
இங்கு, பார்த்தல், கேட்டல், தொடு உணர்வு, மூட்டுகளின் அசைவு உணர்வு, உடலின் சமநிலை ஆகிய, ஏழு வகையான புலன்களை ஒருங்கிணைக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.குருதி சேகரிப்பு மையத்தில், ரத்த சேகரிப்பு, ரத்த கூறுகள் பிரித்தல், ரத்தப் பரிசோதனை மற்றும் பராமரிப்பு செய்வதற்கு நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில், பழுது ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க, 10 ஆண்டுகளுக்கு உரிய நிறுவனத்துடன் புரிந்துணவு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் அரசி, இணை இயக்குனர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE