ஓமலுார்:சரக்கு லாரி மீது வேன் மோதியதில், சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்; 18 பேர் காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த, பெண்கள் உட்பட, 20 பேர், தீவட்டிப்பட்டி அருகே, தார்ச்சாலை பணிக்கு, தளவாடப் பொருட்களுடன், மினி வேனில் நேற்று சென்றனர். டிரைவர் பழனிசாமி, 45, ஓட்டினார்.காலை, 9:45 மணிக்கு, ஓமலுார், காமலாபுரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, குப்பூர், சர்வீஸ் சாலையில் இருந்து, டி.வி.எஸ்., மொபட்டில் வந்தவர், தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, பழனிசாமி, வலது பக்கம் வேனை திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த சரக்கு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில், வேனின் முன்புற சக்கரங்கள் லாரியின் அடியில் சிக்கின. வேனில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மெய்வேல், 60; மணிகண்டன், 4, உயிரிழந்தனர். டிரைவர் பழனிசாமி மற்றும், 11 - 55 வயதுடைய 18 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE