கோவை:கோவை மாவட்ட பெஸ்ட் பிட்னஸ் சங்கத்தின் சார்பில், நிர்வாகிகளுக்கான பொதுக்கூட்டம் குனியமுத்துார், யூத் பிட்னஸ் சென்டரில் நடந்தது.சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு வலுதுாக்கும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம், தமிழன் அமெச்சூர் பாடிபில்டிங் மற்றும் பிட்னஸ் சங்கத்தின் இணைச் செயலாளர் நாகவடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு மாநில பளு துாக்கும் சங்க துணைத்தலைவர் முரளிதரன் பேசுகையில், ''பி.டி. சுரேஷின் மறைவை முன்னிட்டு, மார்ச், 21ம் தேதி, 2வது மிஸ்டர் கோயம்புத்துார்- 2021 ஆணழகன் போட்டி நடத்தப்படும். ஆண்டு தோறும் செப்., மாதம் 'மிஸ்டர். பிடி நினைவு கோப்பை' என்ற பெயரில், மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE