தேனி:கர்ப்பிணி மனைவியை சித்ர வதை செய்து கொன்ற கணவருக்கு, சாகும் வரை துாக்கு தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் சுரேஷ், 36. இவர், 2015ல் ஹைவேவிஸ் பேரூராட்சியில், அ.தி.மு.க., சார்பில் தலைவராக இருந்தார். இவரது மனைவி கற்பகவள்ளி, 24; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.சுரேஷ், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, சிகரெட்டால் மார்பில் சூடு வைத்து, சித்ரவதை செய்தார். 2015 ஜூலை, 21ல் ஆறு மாத கர்ப்பிணியான மனைவியை வயிறு, பிறப்புறுப்பில் தாக்கினார்.
கரு கலைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கற்பகவள்ளி, மறுநாள் இறந்தார். சின்னமனுார் போலீசார், சுரேஷை கைது செய்தனர். தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், வழக்கு நடந்தது.சுரேஷுக்கு சாகும் வரை துாக்கு தண்டனையும், சிசு உயிரிழப்புக்கு, 10 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE