ராமேஸ்வரம்:கொரோனா கண்டறிய கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரையும், இலங்கை முல்லை தீவில் தனிமை அறையில் அடைத்தனர்.
டிச.,14 ல் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரையும், காங்கேசன் துறைமுகம் முகாமில் விசாரித்தனர். வழக்கமாக கைதாகும் மீனவர்களை அந்நாடு மீன்துறையிடம் கடற்படையினர் ஒப்படைப்பர்.
ஆனால் கொரோனா பரவலை தடுக்க கடந்த 7 மாதமாக தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யாத நிலையில், தற்போது கைது செய்த 29 மீனவர்களையும் மீன்துறையிடம் ஒப்படைக்காமல் நேற்று, அந்நாடு மருத்துவ குழுவினர் மீனவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்து, ரத்த மாதிரி சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதனையடுத்து மீனவர்கள் 29 பேரையும் இலங்கை முல்லைதீவு கடற்படை முகாமில் உள்ள அறையில் தனிமைப்படுத்தி அடைத்தனர். 15 நாள்கள் தனிமைபடுத்திய பின் மீனவர்களை விடுவிக்க வாய்ப்பு உள்ளது, என இந்திய, இலங்கை நிரபாரதி விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யூ.அருளானந்தம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE