அவிநாசி:அவிநாசியில் ரோட்டோர கடைகளால், மார்க் கெட் கடை வியாபாரம் பாதிக்கிறது' என, புகார் தெரிவிக்கப்பட்டது.அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேரூராட்சி மார்க்கெட் கடைகளில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனிடம் வழங்கிய மனு;புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தினசரி மார்கெட் கடை செயல்படுகிறது. ரோட்டோரம் கடை வைத்துள்ளவர்களால், மார்கெட் கடைக்காரர்களின் வியாபாரம் பாதிக்கிறது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே, ரோட்டோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தனர்.'வியாபாரிகள் அளித்த புகாரின் மீது, ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பேரூராட்சி செயல் அலுவலர் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE