கோவை:கோவை வேளாண் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நாளை கோவை வருகிறார். அவரது வருகையையொட்டி, 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 41வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கவுள்ளது. இந்நிகழ்வில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில், 1,385 மாணவர்கள் நேரடியாகவும், 57 பேர் தபால் மூலமாகவும் பட்டங்களை பெறுகின்றனர்.விழாவில் பங்கேற்க, துணை ஜனாதிபதி இன்று கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மாலை 4:00 மணிக்கு, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.இதையடுத்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோருக்கு சுகாதாரதுறை சார்பில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேடையில் ஏறி பட்டம் வாங்கப்போகும், 10 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சுகாதார துறையினர் கூறுகையில், 'பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மருத்துவ குழுவினர், பல்கலை ஊழியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள் என மொத்தம், 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில், தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் நபர்கள் மட்டுமே, விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்' என்றனர். ஒத்திகை நிகழ்ச்சிபட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதையொட்டி, நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ரெட்பீல்ட்ஸிலுள்ள சர்க்யூட் ஹவுசிலிருந்து, துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை அழைத்து வருவதற்கான, வாகன ஒத்திகையை நேற்று காலை 10:00 மணிக்கு கோவை மாநகர போலீசார் நடத்தினர். பல்கலை வளாகத்திலுள்ள கால்பந்து மைதானத்தில், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது. இதில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE