திருப்பூர்;ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில், சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.திருப்பூர், வாவிபாளையம் பகுதியில் சடையப்பன் கோவில் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமாக, 16 சென்ட் நிலம் உள்ளது. கடந்த, 1970ல் அங்கு, நகராட்சி தினசரி மார்க்கெட் துவங்கப்பட்டது. பின், அந்த இடத்தை தனியார் பள்ளி நிர்வாகம் குத்தகை அடிப்படையில் பெற்று, பள்ளி நடத்தியது.கடந்த, 1982ல், அந்த இடத்தை காலி செய்ய, பள்ளி நிர்வாகத்துக்கு, நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு நடந்த நிலையில், நீண்ட முயற்சிக்கு பின், கடந்தாண்டு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அந்தாண்டு நவ., மாதம், அந்த இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம், பள்ளி கட்டடத்தை இடித்து, தரைமட்டமாக்கியது.அந்த இடத்தில், எம்.எல்.ஏ., தொகுதி நிதி, 50 லட்சம், மாநகராட்சி பொது நிதி, 50 லட்சம் ரூபாய் என, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.'விரைவில் பணி முடிந்து, கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE