ஊட்டி:ஊட்டியில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 'பார்க்கிங்' தளத்தை சீரமைப்பதில் தொடரும் இழுபறியால், மழை காலத்தில் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.ஊட்டியில், சீசன் காலங்களில் தொடரும் 'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு காண, ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் ஒரு பகுதியில், நான்கு ஏக்கர் நிலத்தில், பார்க்கிங் தளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் 'பார்க்கிங் தளம்' சீரமைப்பு பணி நடக்கவில்லை. தற்போது, அங்கு கட்டணமில்லாமல் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இப்பகுதியில், மழை காலங்களில் அதிகரித்து வரும் சேறு, சகதியால் வாகனங்களை நிறுத்த வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அடுத்த மாதம் முதல், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE