ஊட்டி:பழங்குடியினர் நலப்பள்ளிகளில், 19 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், 19 பட்டதாரி ஆசிரியர் தமிழ்-3, ஆங்கிலம்-4, கணிதம்-4, அறிவியல்-5 மற்றும் சமூக அறிவியல்-3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாத ஊதியம், 9,000 ரூபாய் வழங்கப்படுகிறது.தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை மற்றும் முதுகலையில், பி.எட்., கல்வித்தகுதி முடித்திருக்க வேண்டும். பழங்குடியினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 24ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE