கூடலுார்:மேல்கூடலுார் அருகே, யானை விரட்டி விழுந்ததில், ஒருவர் காயமடைந்தார்.மேல்கூடலுாரை சேர்ந்தவர் முகமது,63. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று, காலை, 7:30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக, குறுக்கு பாதையில் நடந்து சென்றார்.அப்போது, எதிரே வந்த காட்டுயானை அவரை விரட்டியது. யானையிடமிருந்து தப்புவதற்காக, ஓடிய அவர், கீழே விழுந்து காயமடைந்தார். சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக, கேரளா பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE