வால்பாறை:வால்பாறை அருகே, நள்ளிரவில் ரேஷன் கடையை சூறையாடிய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இவை பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன.இந்நிலையில், வால்பாறை அய்யர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் வந்த யானைகள் கூட்டம், அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடையை இடித்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தின.தகவல் அறிந்த, வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் வனவர் முனியாண்டி மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் யானைகளை விரட்டினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் கடைகளை யானைகள் குறிவைத்து தாக்குவதை தவிர்க்க, யானைகள் நடமாடும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். ரேஷன் பொருட்கள் கொண்டு வந்தவுடன், பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE