வால்பாறை:பாரதியார் பிறந்தநாளையொட்டி, கோவை பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை கலை அரங்கில் நடந்த விழாவில், 'இளம்பாரதி விருது' வழங்கப்பட்டது.'தேமதுர தமிழோசை' என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் பங்கேற்ற வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் ராகுலுக்கு, 'இளம்பாரதி விருது' வழங்கப்பட்டது.விருது பெற்ற மாணவனை கல்லுாரி முதல்வர் முரளிதரன் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE