பெ.நா.பாளையம்:டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மா.கம்யூ., கட்சி சார்பில் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் பால மூர்த்தி தலைமை வகித்தார். இதில், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது; பெரும் நிறுவனங்களுக்கு மட்டும் ஆதரவு அளித்து வரும் மத்திய அரசு, தன் போக்கை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கட்சியைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE