உசிலம்பட்டி:உசிலம்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நீதிபதி தன்னிடம் கொடுத்திருந்த பணப் பெட்டியில் ரூ.44 லட்சம் குறைவதாக கூறி தன் மகனையும், மருமகளையும் அடித்து மிரட்டுகிறார், என உசிலம்பட்டி போலீசில் ராமர் 61, புகார் செய்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த அவர், உசிலம்பட்டி போலீசில் அளித்த புகாரில், எனக்கு மகன் முருகன் 42, அவருக்கு மனைவி சுகந்தி, 2 மகள்கள் உள்ளனர். எனது மகன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., நீதிபதியிடம் நெருக்கமாக உள்ளவர்.டிச.14 காலையில் எம்.எல்.ஏ., வீட்டுக்குச் செல்வதாக கூறிச்சென்றவர் நேற்று வரை வரவில்லை.
எம்.எல்.ஏ., வீட்டில் சென்று பார்த்த போது எனது மகனையும், மருமகளையும் கடத்தி வைத்துக் கொண்டு ரூ. 44 லட்சம் கொடுக்க வேண்டும் என அடித்து மிரட்டினார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்த சற்று நேரத்தில் முருகனும், சுகந்தியும் ஸ்டேஷனுக்கு வழக்கறிஞருடன் சென்றனர். முருகன், தன்னிடம் எம்.எல்.ஏ., நீதிபதி அடிக்கடி பணப்பெட்டி கொடுத்து வைப்பார். கேட்கும் போது திருப்பி கொடுப்பேன். அப்படி கொடுத்த பெட்டியை திருப்பிக் கொடுத்த போது அதில் ரூ. 44 லட்சம் குறைவதாகவும், அதை கொடுக்க வேண்டும் என என்னையும், என் மனைவியையும் அடித்து மிரட்டினார்.
எனது மனைவியிடம் இருந்த 25 பவுன் நகையையும் பறித்துக்கொண்டனர், என போலீசாரிடம் தெரிவித்தார்.பின்னர் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து நீதிபதியின் கருத்தை கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE