கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 106 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் புதிதாக, 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு 50 ஆயிரத்து 677 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 631 ஆக உள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 106 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். 48 ஆயிரத்து 998 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது, 1048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE