சாலிகிராமம் : பாதாள சாக்கடை அடைப்பு குறித்து புகார் அளித்தும், வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சாலிகிராமத்தில் சூர்யா தெரு உள்ளது. இத்தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், இதுவரை புகார் மீது எவ்வித நடவடிக்கையும் வாரியத்தினர் எடுக்காதது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால், கொசு தொல்லை அதிகரித்ததோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. மர்ம காய்ச்சலாலும் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE