சூலுார்:சூலுார் ஒன்றிய இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், குரும்பபாளையத்தில் நடந்தது.மாநில செயலாளர் செந்தில் பேசுகையில், ''மறைந்த இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி ராமகோபாலனுக்கு திருச்சியில் மணி மண்டபம் கட்டும் பணிகள், பொங்கலன்று துவங்குகிறது. அதற்கு அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கிளைக்கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE