திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி கோயில்களில் அர்ச்சனை, பாலாபிஷேகம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
கொரோனா தடையுத்தரவிற்கு பின் செப்., 1 முதல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியவில்லை. கால பூஜைகளின் போதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சனை, அபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயிலை நம்பி கடை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேர்த்திக்கடன் செலுத்த அர்ச்சனை, அபிேஷகம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE