நத்தம் : தினமலர் செய்தி எதிரொலியாக நத்தத்தில் ரோட்டோரம் குவிந்திருந்த குப்பை அகற்றப்பட்டது.
நத்தம் விரிவாக்கப் பகுதி அண்ணா நகரில் துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பையின் ஒரு பகுதி, கோவில்பட்டி ரோட்டில், திருமணிமுத்தாறுக்கு முன்புள்ள டிரான்ஸ் பார்மர் அருகே கொட்டப்பட்டு வந்தது.அதிக குடியிருப்புகள் உள்ளதால் இங்கு குப்பை அதிக அளவில் சேர்ந்தது. ரோட்டோர குப்பை தொட்டி பயன்பாடில்லாமல் சாய்ந்து கிடந்தது. இதனால் குப்பை ரோட்டோரம் குவிந்து துர்நாற்றம் வீசி வந்தது.
இப்பகுதியில் சிலர் பாலிதீன் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் நச்சு புகை பரவி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உள்ளளாட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE