திண்டுக்கல் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திண்டுக்கல்லில் காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் நுாறு பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று வருமானவரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.குழுத் தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஜனநாயக மாதர்சங்கம், வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனுமதி மறுத்தும் போராட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.பாலபாரதி கூறுகையில், ''வேல் யாத்திரை, கட்சி விழாக்களுக்கு அனுமதி அளிப்பவர்கள், திண்டுக்கல்லில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கின்றனர். இதற்கு போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE