திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு 2753 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெற மாணவர்கள் இரண்டு கட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதலில் மாநில அளவில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும்.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தேசிய அளவில் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். இந்த தேர்விலும் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.
இத்தேர்விற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 2753 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வரும் டிச.27 ல் முதற்கட்ட தேர்வு நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE