நந்தம்பாக்கம்:
மணப்பாக்கத்தில், வீடு புகுந்து, ஆறு மொபைல் போன்கள், 5,000 ரூபாய் திருடியவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மணப்பாக்கம், பார்த்தசாரதி நகர், பலராம் கார்டனைச் சேர்ந்தவர் விகாஷ் குமார், 22. இவர், நண்பர்கள், எட்டு பேருடன் வசித்து வருகிறார். அனைவரும், அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணி புரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டு கதவை திறந்து வைத்து படுத்திருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த, ஆறு மொபைல் போன்கள், 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.இது தொடர்பாக, விகாஷ்குமார் கொடுத்த புகாரின்படி, நந்தம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE