அண்ணா சாலை:
வணிக வளாக கழிப்பறையில், முன்னாள் ஊழியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தண்டையார்பேட்டை, ரெட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ், 33. இவர், ஜி.பி., சாலை, கே.ஜி., பிளாசாவில் உள்ள, மஹாவீர் பைனான்ஸ் நிறுவனத்தில், ஊழியராக பணிபுரிந்தார். கடந்த மாதம், பணியில் இருந்து நின்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, முன் பணிபுரிந்த அலுவலகம் அமைத்துள்ள, கே.ஜி.,பிளாசாவிற்கு சென்றுள்ளார். அங்கு கழிப்பறைக்கு சென்ற அவர், பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அறிந்து வந்த, அண்ணா சாலை போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE